எஸ்.ஏ. கல்லூரியில் நெகிழித் தவிர்ப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி ஜூலை 2,  2025

*எஸ்.ஏ. கல்லூரியில் நெகிழித் தவிர்ப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி* 

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், உன்னத் பாரத் அபியான் மற்றும் தமிழ்த்துறை ஆகியவை  இணைந்து  நெகிழித் தவிர்ப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலியை ஜூலை 2,  2025 அன்று ஏற்பாடு செய்திருந்தன. 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் நெகிழித் தவிர்ப்பு விழிப்புணர்வு பற்றிய பதாகைகளை ஏந்தி கல்லூரி நுழைவாயிலில் மனிதச் சங்கிலி அமைத்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும்  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.‌ நெகிழி இல்லா உலகத்தைப் படைத்து மாசிலாப் பூமியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்ச்சி  கல்லூரியின் சமூக அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.