எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உலகத் தாய்மொழி தின விழாவை பிப்ரவரி 20, 2026 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உலகத் தாய்மொழி தின விழாவை பிப்ரவரி 20, 2026 அன்று கல்லூரித் திரையரங்கில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. தாய்மொழியின் முக்கியத்துவத்தையும், தமிழ் மொழியின் சிறப்பையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் திரு.ராஜா மற்றும் சூப்பர் சிங்கர் பின்னணிப் பாடகி செல்வி சாரா சுருதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்குக் கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி தமிழ் மொழியின் மாண்புகளை எடுத்துரைத்து சிறப்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் திரு. ராஜா மற்றும் செல்வி சாரா சுருதி ஆகியோர் செவிக்கினிய தமிழிசைப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும் பாடி அவையோரை மகிழ்வித்தனர். அதனையடுத்து மாணவர்கள் தமிழ் மொழியின் சிறப்பைப் பறைசாற்றும் வண்ணம் கவிதை மற்றும் உரைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சி தாய்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புகளை இளைஞர்களிடத்துப் பெரிதும் வலியுறுத்தியது.













