எஸ்.ஏ. கல்லூரியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய முத்தமிழ் முகாம் நிகழ்ச்சி டிசம்பர் 24, 2025
எஸ்.ஏ. கல்லூரியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய முத்தமிழ் முகாம் நிகழ்ச்சி
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலைப் பண்பாட்டு இயக்கம் மற்றும் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து முத்தமிழ் முகாம் நிகழ்ச்சியை டிசம்பர் 24, 2025 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடத்திய து. முத்தமிழின் மாண்பினை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலை உரை நிகழ்த்தினார். இயல் தமிழ் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் இயக்ககம் (பணிநிறைவு) டாக்டர் செய. ராசமூர்த்தி அவர்கள் தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை தமிழ் இலக்கியங்களின்வழி எடுத்துரைத்தார். இசைத்தமிழ் என்ற தலைப்பில் திரைப்பட இசை அமைப்பாளர் கலைமாமணி தாயன்பன் அவர்கள் தமிழ் இலக்கியங்களில் காணலாகும் இசைத்தமிழ்க் கூறுகளையும், திரை இசைப் பாடல்களையும் பற்றிக் குறிப்பிட்டார். நாடகத் தமிழ் என்ற தலைப்பில் திரைப்படப் பாடல் ஆசிரியர் கலைமாமணி கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் நாடகத் தமிழின் தோற்றம் வளர்ச்சி பற்றி உரை நிகழ்த்தினார்.
தமிழ்த்துறைத் தலைவர் திரு மா. விஜயகுமார் நன்றி உரை வழங்கினார். முனைவர் ஈ. இசக்கியம்மாளின் தொகுப்புரையுடன் திரு மா. விஜயகுமார், திருமதி அ. விஜயலட்சுமி மற்றும் திரு. க. வீரராகவன் ஆகியோர் நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.














