எஸ்.ஏ. கல்லூரியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய முத்தமிழ் முகாம் நிகழ்ச்சி டிசம்பர் 24, 2025
எஸ்.ஏ. கல்லூரியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய முத்தமிழ் முகாம் நிகழ்ச்சி
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலைப் பண்பாட்டு இயக்கம் மற்றும் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து முத்தமிழ் முகாம் நிகழ்ச்சியை டிசம்பர் 24, 2025 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடத்திய து. முத்தமிழின் மாண்பினை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலை உரை நிகழ்த்தினார். இயல் தமிழ் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் இயக்ககம் (பணிநிறைவு) டாக்டர் செய. ராசமூர்த்தி அவர்கள் தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை தமிழ் இலக்கியங்களின்வழி எடுத்துரைத்தார். இசைத்தமிழ் என்ற தலைப்பில் திரைப்பட இசை அமைப்பாளர் கலைமாமணி தாயன்பன் அவர்கள் தமிழ் இலக்கியங்களில் காணலாகும் இசைத்தமிழ்க் கூறுகளையும், திரை இசைப் பாடல்களையும் பற்றிக் குறிப்பிட்டார். நாடகத் தமிழ் என்ற தலைப்பில் திரைப்படப் பாடல் ஆசிரியர் கலைமாமணி கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் நாடகத் தமிழின் தோற்றம் வளர்ச்சி பற்றி உரை நிகழ்த்தினார்.
தமிழ்த்துறைத் தலைவர் திரு மா. விஜயகுமார் நன்றி உரை வழங்கினார். முனைவர் ஈ. இசக்கியம்மாளின் தொகுப்புரையுடன் திரு மா. விஜயகுமார், திருமதி அ. விஜயலட்சுமி மற்றும் திரு. க. வீரராகவன் ஆகியோர் நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.










எஸ்.ஏ. கல்லூரியில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த புத்தகம் பேசுது நிகழ்ச்சி டிசம்பர் 23, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் ' புத்தகம் பேசுது' நிகழ்ச்சியை டிசம்பர் 23, 2025 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. சிறப்பு விருந்தினராகப் பட்டிமன்றப் பேச்சாளரும் கவிஞருமான இனியவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழ்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.விக்னேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் திருமதி அ. விஜயலட்சுமி சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகப்படுத்தினார். இன்றைய நவீன உலகில் ஒவ்வொருவரும் தம்மை மேம்படுத்திக் கொள்ளத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்வது இன்றியமையாதது. நாளும் நூல்கள் பல கற்றுப் பல்துறை அறிவைப் பெறுவது அவர்களின் அறிவை மட்டுமல்லாது அவர்களின் வளர்ச்சியையும் சிறக்கச் செய்யும். ஆதலால் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் 'எனக்குப் பிடித்த புத்தகம் ' பற்றி எட்டு மாணவர்கள் தம் கருத்துகளை அழகாகப் பதிவு செய்தனர்.
அதனனத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கவிஞர் இனியவன் நூல் வாசிப்பின் பயன்கள், இலக்கியத் தேடல், நூல்களைத் தேர்வு செய்தல், பல்துறை அறிவு போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து, மாணவர்களிடத்து நூல்களைப் படிக்க வலியுறுத்தினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறைத் தலைவர் திரு மா. விஜயகுமார் மற்றும் உதவிப் பேராசிரியர் ரா. பிரியா ஆகியோர் அழகாக ஒருங்கிணைத்திருந்தனர். ரா. பிரியா நன்றியுரை வழங்கினார். முனைவர் சித்ரா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். மாணவர்களின் அறிவை மெருகூட்ட இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியது.










எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் உலகத் தமிழ்ப் பேரியக்கம் மற்றும் தமிழால் இணைவோம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது - 10.12.2025
சென்னை திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் உலகத் தமிழ்ப் பேரியக்கம் மற்றும் தமிழால் இணைவோம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 10.12.2025 அன்று நடந்த இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் திரு ப. வெங்கடேஷ் ராஜா அவர்களும் கல்லூரியின் இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் தமிழ்த் துறைத் தலைவர் மா.விஜயகுமார் உலகத் தமிழ்ப் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் திரு சத்திய நாராயண ராஜ் பால குரு மற்றும் பொதுச்செயலாளர்திரு சுப்பிரமணியன்ஆகியோர் இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இக்கல்லூரி மாணவர்கள் உலகளாவிய தமிழ் அறிஞர்களோடு கலந்துரையாடிப் படைப்பாற்றல் திறனை வளர்த்து மேடைப்பேச்சுப் பயிற்சி பெறவும் மாணவர்களின் இலக்கியத்திறன் வளரவும் பன்னாட்டு ஆய்வு மற்றும் கருத்தரங்குகள் நடத்தவும் வழிவகை செய்யப்படும். மூன்றாண்டுகள் தொடர்ந்து இப் புரிந்துணர்வு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ்ப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி 07.11.2025
சென்னை திருவேற்காடு எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் மிகச் சிறப்பாகக் கல்லூரி வளாகத்தில் இன்று 07/11/2025 அன்று காலை 8. 45 மணியளவில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த வேல்டெக் மல்டி டெக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு எஸ் ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். கண்காட்சியாக அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் குறித்த அரங்குகளைக் கண்டு களித்து மாணவர்கள் அரங்கில் கூடினர். கல்லூரியின் தாளாளர் திரு.ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார் வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் வரவேற்று உரையாற்றினார் மாபெரும் தமிழ்க் கனவு என்னும் தலைப்பில் தமிழ்நாடு அரசின் மாணவர் கல்வி நலன் சார்ந்தும் வேலை வாய்ப்பு சார்ந்தும் காணொளிகளையும் கீழடி, இரும்பின் தொன்மை, மற்றும் ராஜ ராஜ சோழன் பற்றிய காணொளிக் காட்சியினைக் கண்டுகளித்தனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சுரேஷ் அவர்கள் மாபெரும் தமிழ்க் கனவு திட்ட விளக்க உரையை வழங்கினார் விழாவில் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் கரு ஆறுமுகத்தமிழன் சுடர் முகம் தூக்கு எனும் தலைப்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினார் இவரது உரை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வானவர்கள் கூர்ந்து கவனிக்கும் வண்ணம் ஈர்ப்பாகவும் அமைந்திருந்தது. விழாவின் நிறைவில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வினாக்களை எழுப்பிய மாணவர்களுக்கும் சான்றிதழும் புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட்டன நிறைவில் கல்லூரியின் இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிறைவில் நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.














எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேச்சுப் பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் 13, 2025
*எஸ்.ஏ.கல்லூரியில் பேச்சுப் பயிற்சிப் பட்டறை*
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேச்சுப் பயிற்சிப் பட்டறையை ஆகஸ்ட் 13, 2025 அன்று கல்லூரித் திரையரங்கில் நடத்தியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் திரு. துரைப்பண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
இந்நிகழ்வில், இவர் மாணவர்களுக்கு மேடையில் எவ்வாறு பேசுவது என்பதையும் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். மேடையில் பேசுவதற்கான உத்திகளையும் எவ்வாறு தகவல்கள் சேகரிக்க வேண்டும் என்பதையும் பயமின்றிப் பேச வேண்டும் என்பதையும் எவ்வாறு பேச வேண்டும் என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி, நம் அன்றாட வேளையில் செய்யக்கூடிய செயல்களையும் கூறினார்.
இந்நிகழ்வில் தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் வாழ வேண்டும் என்பதை நகைச்சுவையாக எடுத்துரைத்தார். இவர் பாடல்வழியாக மாணவர்களுக்குச் செய்தினைக் கூறியதால் மிகவும் ஈடுபாட்டுடன் கவனித்தனர். பிறகு நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு நிறைவடைந்தது. இதில் 250 மாணவர்கள் கலந்து கொண்டு சிற்பித்தனர்.






எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் முத்தமிழ் விழா ஆகஸ்ட் 4 மற்றும் 5, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் முத்தமிழ் விழா ஆகஸ்ட் 4 மற்றும் 5, 2025 ஆகிய இரு நாட்களில் சிறப்புற நடத்தியது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 4, 2025 அன்று மாணவர்களுக்கான தனிநபர் பாட்டுப் போட்டி, தனிநபர் நடனப் போட்டி ஆகிய போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. அந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5, 2025 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற முத்தமிழ் விழாவில் மேனாள் அரசவைக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் அவர்களும், சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் தங்கசாரா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் தங்க சாரா அவர்கள் யாப்பிலக்கணக் கவிதையை கூறி அரங்கத்தையே மகிழ்வித்தார். இந்நிகழ்வில் திரு. முத்துலிங்கம் அவர்கள் ஆசிரியர்களது பெருமையையும் மாணவர்களது கவனிக்கும் திறனையும் பாராட்டி 99 குறிஞ்சி மலர்களைப் பற்றியும் கூறி உரையைச் சிறப்பித்தார். பிறகு, மாணவர்களுக்கு பரிசினை அளித்தனர். பரிசுப் பெற்ற மாணவர்கள் நடனமும் பாடலும் பாடி அரங்கத்தையே அதிர வைத்தனர். இந்நிகழ்வில் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.








எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் முத்தமிழ் விழா ஆகஸ்ட் 4 மற்றும் 5, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் முத்தமிழ் விழா ஆகஸ்ட் 4 மற்றும் 5, 2025 ஆகிய இரு நாட்களில் சிறப்புற நடத்தியது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 4, 2025 அன்று மாணவர்களுக்கான தனிநபர் பாட்டுப் போட்டி, தனிநபர் நடனப் போட்டி ஆகிய போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. அந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5, 2025 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற முத்தமிழ் விழாவில் மேனாள் அரசவைக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் அவர்களும், சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் தங்கசாரா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் தங்க சாரா அவர்கள் யாப்பிலக்கணக் கவிதையை கூறி அரங்கத்தையே மகிழ்வித்தார். இந்நிகழ்வில் திரு. முத்துலிங்கம் அவர்கள் ஆசிரியர்களது பெருமையையும் மாணவர்களது கவனிக்கும் திறனையும் பாராட்டி 99 குறிஞ்சி மலர்களைப் பற்றியும் கூறி உரையைச் சிறப்பித்தார். பிறகு, மாணவர்களுக்கு பரிசினை அளித்தனர். பரிசுப் பெற்ற மாணவர்கள் நடனமும் பாடலும் பாடி அரங்கத்தையே அதிர வைத்தனர். இந்நிகழ்வில் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.




எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன்வளர் நிகழ்வு ஆகஸ்ட் 1, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன்வளர் நிகழ்வு
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் திறன்வளர் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 'நீங்களும் பேச்சாளர் ஆகலாம்' என்ற திறன்வளர் நிகழ்வு ஆகஸ்ட் 1, 2025 அன்று கல்லூரித் திரையரங்கில் நடைபெற்றது. எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ம. எஸ்தர் ஜெகதீசுவரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிறந்த பேச்சாளருக்கு அவையை தன்வயப்படுத்தும் திறன், செறிந்த தகவல்கள், தெளிவான உச்சரிப்பு, ஈர்க்கும் உரை வீச்சு, மிகச் சிறந்த கண்ணோட்டம் ஆகிய பண்புகள் இன்றியமையாதன என்று வலியுறுத்தினார். டாக்டர் அப்துல் கலாம், இரா.பி. சேதுப்பிள்ளை, பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, சுகிசிவம் போன்ற மிகச் சிறந்த பேச்சாளர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் மிகச் சிறந்த பேச்சுத் திறனை சான்றுகளுடன் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினரின் உரையைக் கேட்ட மாணவர்கள் சிறந்த பேச்சாளராக உருவாவதற்கான உந்துதலைப் பெற்றனர். மாணவர்களின் பேச்சுத்திறனை இனங்கண்டு, அவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்த இந்நிகழ்ச்சி களம் அமைத்துக் கொடுத்தது சிறப்புக்குரியது.








டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு முப்பெரும் விழா ஜூலை 31, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு முப்பெரும் விழாவை ஜூலை 31, 2025 அன்று நடத்தியது. இந்நிகழ்வில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் டால்பின் என்னும் பாலூட்டி உயிரினம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இவ்விழிப்புணர்வு நடந்தது.
இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இரசாயன வேதியியல் கழிவுகளைக் கடலில் கலக்காமல் இயற்கைச் சமநிலையைப் பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் டால்பினை பற்றிய தகவல்கள் அடங்கிய காணொலி காட்சியைத் திரையிட்டனர்.
இதில், கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் கேடு விளைவிக்கும் நெகிழிக் குப்பைகள், குடுவைகள், பீங்கான் பாட்டில்கள் முதலியவற்றைக் கடலில் போடக்ககூடாது என்ற விழிப்புணர்வை அளித்தனர். இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.









எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மரபால் மலர்வோம் நிகழ்ச்சி ஜூலை 28, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் மரபால் மலர்வோம் நிகழ்ச்சி ஜூலை 28, 2025 அன்று கல்லூரித் திரையரங்கில் நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்வதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் அருமையாகப் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் நடிப்பின் மூலமாக அவர்களின் திறன்களை வெளிப்படுத்தினர். இதில் மரபால் மலர்வோம் மாணவர் திறன் வளர் நிகழ்வு -1 என்ற தலைப்பில், பிழையின்றி மேடையில் தமிழ் பேசுதல் போட்டி மற்றும் மௌன மொழிப் போட்டியில் மாணவர்கள் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர். அவர்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் மேடையில் தைரியமாக பேசுவதற்காகவும் இந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
















